பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
Sunday, 10 May 2015
Saturday, 9 May 2015
வெப்பத்தை தணிக்கும் உணவுகள்
வெப்பத்தை தணிக்கும் உணவுகள் !!!
உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்
பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.
தற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அளவுக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய வெப்பம் உடலில் வெப்பத்தை மட்டும் அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே இத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு உடலில் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதிகமான தண்ணீர் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பானங்கள் குடிப்பது என்பனவற்றை பின்பற்ற வேண்டும்.
சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, இதனை உணவில் அதிகம் சேர்த்து, உடல் வெப்பத்தை தணிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.
தர்பூசணி
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.
முலாம் பழம்
உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.
வெள்ளரிக்காய்
கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியை குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.
புதினா
இயற்கை வைத்தியத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள், புதினா ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.
முள்ளங்கி
முள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
எள்
தினமும் எள் சாப்பிட்டாலும், உடல் வெப்பமானது எளிதில் தணியும். மேலும் உடலில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கும்.
சீரகம்
சீரகத்தை இரவில் படுக்கும் போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரை காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.
இளநீர்
உடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளை
மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தாலும், உடல் கூலாக இருக்கும்.
கசகசா
நாள்தோறும் இரவில் தூங்கும் முன், ஒரு கை கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், நல்ல நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, உடல் வெப்பமும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
வெந்தயம்
மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியம் என்றால், அது தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது தான். இதனால் உடல் வெப்பமானது எளிதில் தணியும்.
குளிச்சியான பால்
குளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.
Thursday, 10 October 2013
நம்மண் - வேலை விவரத்தின் படங்கள்
DR. முகுந்தன்
இயற்கை பண்ணை – பேத்துபாறை –கொடைக்கானல்
(DR.
MUKUNDAN ORGANIC FARM – PEAATHUPAARAI – KODAIKAANAL)
வணக்கம்
அக்டோபர் 01.10. 2013 - 10. 10. 2013 அன்று வரை நடை பெற்ற
வேலை விவரத்தின் படங்கள்
working photos on October 01.10.2013 to 10.10.2013
உழவு செய்த நிலத்தில்
உள்ள களைகளின் வேர் பகுதியை அகற்றுதல் – பெண்கள்
After
ploughing land bushes root remove used females
வேலை அளவு அளந்து கொடுக்கபடுகிறது 400 ச. செ. மீ
/ நபர்
Marking
cleaning area 400 Sqft / female
காந்தாரி மிளகாய் கவாத்து
( bird eye chilli pruning )
கவாத்துக்கு முன் (
before pruning )
கவத்துக்கு பின் ( after pruning )
பயிர் ஊட்டங்களுக்கு
அடையாளம்
Labeling for
plant nutrients
முளைப்பு திறனற்ற காந்தாரி மிளகாய் ( bird
eye chilli is not germinate )
Send
new seed sir
Next week
work
1.
Raised
bed formation
2.
Chillis
Pruning
3.
Country
ploughing – top area
4.
Bushes
clearing
5.
Spraying
nutrient for chillis
நன்றி
நம்மண்
THANKS – NAMMANN ORGANIC FARMS DEVELOPERS
9787305169
nammannorganic@gmail.com
இயற்கை வழி விவசாய தொடர்பான ஒப்பந்த அறிக்கை
இயற்கை வழி விவசாய
தொடர்பான ஒப்பந்த அறிக்கை
இயற்கை வழி விவசாயம்
செய்வது தொடர்பாக பண்ணை உரிமையாளருக்கும், நிலத்தை மேம்படுத்துபவருக்கும் இடையேயான
புரிந்துணர்வு ஒப்பந்தம்
நம்மில் 1 வது
பார்ட்டி (பண்ணை உரிமையாளர்) க்கு சொந்தமான இங்கு கீழே குறிப்பிட்டுள்ள பரப்பளவில்
விவசாயம் செய்வது தொடர்பாக 2வது பார்ட்டியிடம் ( நம்மண்- விவசாய பணி செய்வோம்) கலந்து பேசியதில் 1வது பார்ட்டிக்குச் சொந்தமான இடத்தை
எவ்வித இடையூறுமின்றி இயற்கை வழி விவசாயம் செய்து நிலத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன்
2வது பார்ட்டிக்கு கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ள மனப்பூர்வமாக
ஒப்புக் கொள்கிறேன்.இந்த விவசாய பணி ஒப்பந்தமானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவருட காலமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேற்படி 1வது பார்ட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பினால் 2வது பார்ட்டியுடன் கலந்து
பேசி நீட்டித்துக்கொள்ளலாம்.
விவசாயம் செய்ய
உள்ள நிலத்தில் 1வது பார்ட்டின் நிலத்தை மேம்படுத்த ஆகும் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதை வைத்து மொத்த பராமரிப்பு பணியையும், 2வது பார்ட்டி செய்து கொள்ள வேண்டியது
அவசியமான ஒன்றாகும்.
ஒப்பந்தபடி சாகுபடிக்காக
தேர்வு செய்யும் இடத்தை 1வது பார்ட்டியுடன் கலந்து பேசி 2வது பார்ட்டி தேர்ந்தெடுக்கும்
தார்மீக உரிமை உள்ளது. அதன் பின் 2வது பார்ட்டி சாகுபடி தொடர்பாக எந்த பயிரினை சாகுபடி
செய்வது என்று தேர்வு செய்து 1வது பார்ட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு 1வது
பார்ட்டி ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் வேறு பயிரினை தேர்வு செய்து 1வது பார்ட்டியிடம்
சமர்பிக்க வேண்டும். ஆனால் சாகுபடி செய்யும் பயிரினை தேர்வு செய்யும் தார்மீக உரிமை
2வது பார்ட்டிக்கு மட்டுமே உண்டு. அதில் 1வது பார்ட்டிக்கு இடையூறு செய்யும் உரிமை கிடையாது . அதன் பின் இயற்கை
வழி விவசாயம் செய்வது தொடர்பானது என்பதால் செயற்கை வழி இடுபொருள்கள் ( உரம், பூச்சி
கொல்லி ) எக்காரணம் கொண்டும் சாகுபடி பரப்புக்குள்
பயன்படுத்த உரிமை கிடையாது.
இயற்கை வழி விவசாயம்
செய்கின்ற பரப்பளவைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறிய பகுதியாவது ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்ய
1வது பார்ட்டி சம்மதிக்க வேண்டும்.
2 வது பார்ட்டியால்
நடைபெறும் வேலைகளின் விவரங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் 1 வது பார்ட்டிக்கு எழுத்துப்பூர்வமாக
தெரிவிக்க வேண்டியது அவசியமானதாகும். தவறும் பட்சத்தில் 1 வது பார்ட்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
2வது பார்ட்டி உடன்பட வேண்டும்.
சாகுபடி செய்ய
ஆகும் மொத்த செலவில் ஒப்பந்தம் கையெழுதானவுடன் முதற்கட்ட வேலை ஆரம்பிக்க ஆகும் மொத்த
உற்பத்தி செலவில் 50% பிணைத் தொகையாக 2 வது
பார்ட்டிக்கு தந்து உதவ 1வது பார்ட்டி மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அதன்பிறகு மீதமுள்ள 50% பணத்தை 25% மற்றும் 25% எனப்பிரித்து
இரு தவணைகளாக ஒரு வருட காலத்துக்குள் தந்து உதவுவதுடன் சாகுபடி செய்கின்ற நிலத்தின்
பயிர் சாகுபடியின் நிகர லாபத்தில் 20% பங்கு தொகையை 1வது பார்ட்டி 2வது பார்ட்டிக்கு
கொடுக்க மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும். இதுவே இந்த முழு ஒப்பந்தத்தின் சாரம்சமாகும்.
Sunday, 14 July 2013
நம்மண் அமைப்பின் தொடக்க விழா
நம்மண் (மண்ணின் மைந்தர்கள்) - இயற்கை விவசாய பண்ணை தொடக்க விழா
ஆனி மாதம் 26 தேதி (ஜீலை 10) புதன் கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அமைந்துள்ள
P.K.R. இயற்கை பண்ணையில் நம்மண் அமைப்பின் தொடக்க விழா நடந்தது
இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிஞர் ;திரு நம்மாழ்வார் அவர்கள், பங்குகொண்டு நம்மண்
நிறுவனத்தினை தொடங்கி வைத்தார்
நிறுவனத்தின் குறிக்கோள்
இயற்கை
மீது தீவிர ஆர்வம் கொண்ட இளைஞர்களை தேர்வு செய்து இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள செய்வதுடன்
பண்ணையாளர்களின் உற்பத்தியை பெருக்கி அதன்
மூலம் இருசாரரும் பயனடைய செய்வதே இதன் முக்கிய
நோக்கமாகும்.
இன்றைய
இளைஞர்கள் விவசாயத்தை தவிர்த்து அனைத்து துறைகளிலும் முன்னேறுகின்றனர். ஆனால் உணவளிக்கும்
பூமி தாயை மறந்து பல உடல் உபாதைகளுக்கு உட்பட்டு மருத்துவமனையில் தஞ்சம் புகுவோரின்
எண்ணிக்கை இன்றளவில் அதிகம் என்பதை நம் கண்கூடாக காண்கின்றோம்.அதனை தவிர்த்து நமது
முக்கிய குறிக்கோளான உணவே மருந்து என்ற கொள்கையை
இளைஞர்களிடையே பரப்பி நோய் இல்லா உலகை படைப்போம் என சபதம் ஏற்போம்.
’’தனியொரு
மனிதனுக்கு உணவு இல்லை யேல் உலகத்தினை அழித்திடுவோம்’’ - என்றான் மகாகவி
இன்று
உணவு உற்பத்தியை தவிர மற்ற துறைகளில் ஏறத்தாழ தன்னிறைவு அடைய செயல் பட்டு வருகிறது அரசு.
இதனை
உடைத்து அனைவருக்கும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு செய்வதோடு நோயில்லா உலகை படைப்பதே
நம் நோக்கமாகும்.
இயற்கை
மீது ஆர்வம் கொண்ட அனைத்து பண்ணையாளர்களையும் ஒருக்கிணைத்து ஆரோக்கிய உலகை படைப்போம்!!!அனைவரும்
வாரீர்!! ஒன்றிணைவோம்!! புதிய உலகம் படைப்போம்!!!!
நிறுவனத்தின் வரைபடம்
நம்மாழ்வார் அவர்களின்
உதவியாளர் சுமதி அவர்களுடன் முருகேசு - நம்மண்
நம்மாழ்வார் அவர்களின்
உதவியாளர் சுமதி அவர்களுடன் பாஸ்கர்- நம்மண்
நம்மாழ்வார் ஐயாவுடன் விழாவிற்கு வந்த விவசாயிகள்
ஆலோசனை
விழாவிற்கு வந்த
ஆனந்தராசு அம்மா- அப்பா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்த காட்சி
பேராசிரியர்;திரு
; சிவகுமார் (P.K.R. இயற்கை பண்ணை .உரிமையாளர்)
இயற்கை பொருள்களை
சந்தபடுத்தி வரும் ஷாஜன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
பண்ணையை சுற்றி
பார்வையிடுதல்
ஐயா அவர்களுடன்
மதிய உணவு (வரகு சோறு, கவுனி பாயசம், பருப்பு குழம்புடன்)
ஐயாவுடன் நம்மண் செயல் வீரர்கள் (வேல்ராஜ், பிரவீன்,முருகன், பாஸ்கர்)
விழாவிற்கு வந்த
தமிழர் குமுக பொருளாதார மேம்பாட்டு கழக செயலாளர் தமிழ் வாசகன் அவர்களுடன்
நம்மண் செயல் வீரர்கள் ( ஆனந்தராசு, முருகேசு, மகேசுவரன்,சரத்,வேல்ராசு)
நன்றி
நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
திருநெல்வேலி,
தமிழ்நாடு
அலைபேசி;
+91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல்
;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com
Monday, 8 July 2013
வேளாளர்
வேளாளர்
காலமாற்றம்
இலக்கிய உலகில் இறைவனைப் போற்றியவர்கள்,
கால ஓட்டத்தில் முடிமன்னரைப் பாடினார்கள். இறைக்காப்பியங்கள் மன்னர் காப்பியங்களாக
மாறியது. பின்னர் மக்கள் காப்பியங்கள் தோன்றின. மக்கள் காப்பியத்தின் மணிமுடி சிலப்பதிகாரம்.
அதுவும் வணிக மக்களைச் சார்ந்தது. அறவோர், ஆளுவோர், வணிகர், உழவர் என்ற பார்வையில்
உழவர் காப்பியங்கள் தோன்றவில்லை. உழவர் படைப்பு மிகவும் பிற்காலத்தில் தோன்றியது. முக்கூடற்பள்ளு
என்ற பெயரில் உழவரை இழிவுப்படுத்தும் பாங்கில் தோன்றின. சிலப்பதிகாரக் காலத்திற்கும்
முக்கூடற்பள்ளு காலத்திற்கும் இடையில் உழவர் சிறப்பை பாடல்களில் படைத்துள்ளார்கள்.
மருதநில உழவர்கள் தான் தன் உற்ப்பத்தி திறன் மேன்மையால் வேளாளர். வேளிர், மன்னர், மாமன்னர்
என வளர்ந்து, ஆரியத்திற்கு ஆட்பட்டு, கால கால ஓட்டத்திற்கு ஏற்ற உற்பத்தி முறையை ஏற்காமல்
அயல் நாட்டு உற்பத்தி முறையைப் பின்பற்றி, ஆண்டயினம், அடிமையானது.
கம்பன் காலம்
கம்பன் காலத்தில் இறைவன் மன்னர்களாக பிறவி எடுத்து மக்களைக் காப்பாற்றும்
கருத்துடையக் காலம். இது இறைவனுக்கும் மன்னனுக்கும் ஏற்ப்பட்ட சமரசக் கொள்ளைப் போன்றது.
காணத கடவுளுக்கு அஞ்சுவதும் காணும் மக்களுக்கு அஞ்சுவதும் மக்களின் இயல்பான சூழ்நிலையில்,
காப்பிய படைப்பாளர்கள் உள்ளத்தில் தோன்றும் சமரசக் கொள்கையால் இறைவன் மன்னராகப் பிறவி
எடுத்து மக்களைக் காப்பாற்றும் படைப்புகள் தோன்றும். அந்த அடிப்படையில் தான் வால்மீகி
இராமாயணத்தைக் கொண்டு கம்பன் இராமாயணம் படைத்தார். அவர் படைப்பு ஒரு வகைத் தனித் தன்மையுடையதால்
அதைக் கம்ப இராமாயணம் என்றே அழைத்தார்கள். காணக்கடவுள், காணும் மன்னர் இருவருக்கும்
அடிப்படையாய், ஆணிவேராய், மூலமாய், முதல்வராய் இருப்பவன் உழவன் என்பதை கம்பர் உணர்கிறார்.
உணர்ந்ததை உரைப்பவன் தான் உண்மையான படைப்பாளன். உலகு உய்ய இறைவன் பிறவி எடுப்பார் என்ற
கருத்துக்கு மேலாக ‘’ உலகு உய்யப் பிறந்தோரே உழவன்’’ என்று முழங்குகிறார். இது உண்மை.
மற்றவை கற்பனை.
கம்பன் காலத்தில் குலம்
தமிழர்கள் மனிதனை பண்பின் அடிப்படையில்
நான்கு குலமாக பார்த்தார்கள். அறவோர் குலம், ஆள்வோர் குலம், வணிகர் குலம், வேளாளர்
குலம் என்பன. அறம், ஆளுமை, நேர்மை, உழைப்பு இந்த நான்கும் ஒவ்வொரு மனிதனின் பண்புகள்.
எந்த பண்பு மேலோங்கியிருக்கிறதோ, அவர்களின் குழுவை அக்குலமாகப் பார்த்தார்கள் ஆனால்
ஆரியம் அந்தணர் குலம், அரசர் குலம், வைசியர் குலம், சூத்திரம் குலம் என்று திரித்தார்கள்.
அது கம்பன் காலத்தில் தொழுங்குலம், எழுங்குலம், செழுங்குலம், உழவர்குலம் என்ற நிலையில்
கம்பர் கண்டார். தொழுங்குலம் அந்தணர் அதாவது ஆரியர், எழுங்குலம் ஆளும் மன்னர்கள், செழுங்குலம்
வணிகர் குலம், உழவர் குலம் வேளாளர் குலம், ஆரிய பார்வையில் சூத்திர குலம். இது கம்பனுக்கு
உடன்பாடில்லை. உழவர் குலம் தான் உயர் குலம், உலகிற்கு உணவளிக்கும் குலம். மன்னனை ஆண்ட
குலம், அறத்திற்கு வழி வகுத்தது. அறவாழ்வு வாழ்ந்தகுலம், உற்பத்தி செய்து, உற்பத்தியை பகுத்து, பகிர்ந்து கொண்டு நேர்மையின் சின்னமாய்
வாழ்ந்தவர்கள். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உயர்ந்த குலத்தவர் உழவர் குலத்தவர்
என்று கம்பர் உணர்ந்தவர். காலமாற்றம் கருத்துமாற்றம் என்றாலும் கம்பன் உள்ளம் மாறவில்லை.
சமுதாயத்தில் உள்ள நிலையை காண்கிறார். உண்மை நிலையை உணர்கிறார். உள்ளதைப் பாடுகிறார்.
படைக்கிறார். அப்படி படைத்தது தன் ‘’ஏர் எழுபது’’ மன்னன் போர் கருவியான ஈட்டியைப் பார்த்து
மன்னன் மகிழ ஒட்டகூத்தன் பாடியது ‘’ஈட்டி எழுபது’’ கம்பன் உள்ளத்தில் பட்ட உழவன் சிறப்பை
வெளிப்படுத்த பாடியது தான் ‘’ஏர் எழுபது’’ ஏர் எழுபது உழவுத் தொழில் மேம்பட்ட, மருத
நில மக்களின் மாண்பையும் உயர்வையும் உலகிற்கு அறிவிக்க வந்த உழவர் காப்பு காவியம்.
முக்கூடற் பள்ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க பாடிய படைப்பு.
கம்பன் கண்ட வேளாளர்
உண்டிக் கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்
என்பது சான்றோர் வாக்கு. உண்டியை உற்பத்தி செய்தவர்களில் முதன்மையானவர்கள் மருத நில
மக்கள் ஆவார்கள். நெல்லை விதைத்த விற்பனர்கள். உழுதல்,களை எடுத்தல், எருவிடுதல், நீர்பாச்சுதல்,
காப்பு பயிர் செய்தல், உற்பத்தியை பகிர்தல், பகுத்துண்டு வாழ்தல், பிறர்க்கென வாழ்தல்,
பிறரை ஆளுதல், பிறருக்க வழிகாட்டுதல், பிறரைக்
காப்பாற்றுதல், போன்ற பல்வேறு திறன்களைப் பெற்றவர்கள் மருதநில மக்கள். மன்னர்கள், அவர்கள்
ஆரியப் பாரவையில் சூத்திரர் ஆனார்கள். கம்பன் நெஞ்சம் தாங்கிக் கொள்ளவில்லை. கம்பன்
உரத்தக் குரலில் தன் கருத்தை ‘’ஏர் எழுபது’’ பாயிரத்தில் பதிகிறார். இந்தப் புரிதலும்,
உணர்வும் இன்னும் மருதநில மக்களுக்கே வரவில்லை என்பது தான் வேதனையான நிலை. கம்பன் கண்ட
மருத நில வேளாளரைப் பாருங்கள்
‘’ தொழும் குலத்தில் பிறந்தான்
ஏன்?
சுடர் முடிமன் னவர் ஆகி
எழும் குலத்தில் பிறந்தால் ஏன்?
இவர்க்குப்பின் வணிகர்எனும்
செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்?
சிறப்புடையர் ஆனால்ஏன்?
உழும்குலத்தில் பிறந்தாரே
உலகு உய்யப் பிறந்தாரே …….. (8 பாயிரம்)
ஒரு மானுட இயல்பு தோன்றுகிறது.
அது இயல்பு. அந்த தோற்றம் ஆர்யத்தால் ஏற்ப்படுத்திக் கொண்ட ஏற்பாட்டால் உயர்வு. தாழ்வு
என்று கொள்ளப்பட்டது. தொழுங்குலம், அந்தணர் குலம், எழும்குலம், மன்னர்குலம், செழுங்குலம்,
வணிகர் குலம், இங்கு பிறந்தால் இறப்பு என்ற கருத்துடைய காலம். கருத்தை மறுக்கிறார்.
மாற்றுகிறார். உழும் குலமான சூத்திரர் குலத்தில் பிறப்பதை தான் உயர்வு என்று பறைசாற்றுகிறார். உழும் குலந்தான்
உற்பத்தி செய்கிறது. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உற்பத்தியை, உணவை தருகிறனர்.
மற்ற குலத்திற்கும் உணவளிக்கும் உயர்ந்த குலம் என்று பதித்தார். படித்தவர் எத்தனை பேர்.
பரப்பியவர்கள் எத்தனை பேர். ஆரியத்தை எதிர்த்தவர்கள் எத்தனை பேர்.ஆரியம் மருத நில மக்களை
ஆட்சியாள மற்றவர்களுக்கு பயன்பட்டதால் அக்கருத்தை ஆதரிக்கவில்லை. மருதநில மக்களாகிய
உழவர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தற்போது அறவோர் ஆரியர், ஆளுவோர் தமிழர் அல்லாதோர்.
வணிகர் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர். ஆகவே, இன்னும் கம்பர் தேவைபடுகிறார்.
உழும் குலமே ஆண்ட குலம் ஆளபோகும்
குலம்
உழும் குலம் தான் தன் உயர்வால்
மண்ணை ஆண்டது. சங்ககாலம் காட்டுகிறது. ஆரிய மாயையால் அனைத்தும் மாறியது. மருதநில மன்னர்
குலம். தீண்ட தகாத மக்களாய், மருதநில தொழில் பாவத்தொழிலாய் போன காலத்தை மாற்ற, கம்பன்
வழி காட்டியுள்ளார். உழும் குலத்தில் பிறந்தாரே, உலகு உய்யப்பிறந்தேரே! உலகு உய்யமட்டுல்ல,
உலகை ஆளப்பிறந்தவர்களும் உழைப்பவர்களே தமிழ் மண்ணை ஆளப் போவதும் உழும் குலமே. உலகு
குலத்தின் மருதநில மன்னர்களே. நீங்கள் மன்னர் ஆவது எந்நாள்? ஏர் எழுபதால் ஏராளர் எழ
வேண்டும். பார் ஆள வேண்டும். அது தான் தமிழ் உழவர் ஆட்சி !!!!!
நன்றி
நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி,
தமிழ்நாடு
அலைபேசி;
+91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல்
;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com
Subscribe to:
Posts (Atom)





