Monday 19 December 2011

மான்சென்டோவின் தங்கப் புரட்சி



மான்சென்டோவின் தங்கப் புரட்சி
First Published : 22 Nov 2011 02:51:44 AM IST

Last Updated :

 முதல் பசுமைப் புரட்சியை இந்தியாவின் வேளாண்மைத்துறைபொதுநல நோக்கில் கோதுமையிலும் பின்னர் நெல்லிலும் வீரிய ரக விதைகளைக் கொண்டு ரசாயன உர பலத்துடன் மண்வளத்தைப் படிப்படியாக அழித்து உணவு உற்பத்தியைப் பெருக்கியபோது, "எங்கு நோக்கினும் பசுமையடாஎன்றார்கள்.

 இந்தப் பசுமையைப் பார்த்து பயிர்களைத் தாக்கும் பூச்சி இனம் உயர்ந்து பயிர்களைக் காக்கும் பூச்சி இனம் அழிந்து மெல்ல மெல்ல உற்பத்தித்திறன் குறைவதைக் கண்டு இரண்டாவது பசுமைப் புரட்சியை மத்திய அரசு 2010-ல் அறிவித்துப் பொறுப்பைமான்சென்டோவுக்கு வழங்கிவிட்டதால் இன்றைய இந்தியாவில், "எங்கு நோக்கினும் தங்கமடாஎன்று சொல்லும் அளவில் மஞ்சள்நிற மக்காச்சோளம் பொங்கி வழிவதைப் பார்க்கிறோம். மான்சென்டோ தங்களின் வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகளுக்கு தங்க சத்தியம் வழங்கி நிரூபித்தும் விட்டார்கள்.

 மாபெரும் தந்திரங்களைக் கடைப்பிடித்து மாநில அரசுகளை வசப்படுத்திவிட்டார்கள். வளம்குன்றா வேளாண்மைஉற்பத்தி உயர்வுவிவசாயிகளுக்கு லாபம் என்பது மாநிலக் கொள்கையானால்அவையே எங்கள் கொள்கை என்று மக்காச்சோளத்தை சிறு விவசாயிகள் வரை எடுத்துச் சென்றுள்ளனர். பழங்குடி மக்களிடமும் மக்காச்சோள வியாபாரம்சென்றுவிட்டது.
 பழங்குடி மக்கள்-சிறு குறு விவசாயிகளின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தொண்டு நிறுவனங்களுடனும் மான்சென்டோ தொடர்பு கொண்டு இலவச விதை (வீரிய ஒட்டுரகம்)வழங்கியுள்ளது. வீரிய ஒட்டு மஞ்சள் மக்காச்சோள விதைகளை அறிமுகப்படுத்தி இந்தியஉற்பத்தியை 2010-11-ல் 2.1 கோடி டன்னுக்கு உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
 உண்மையில் நமது மக்காச்சோள உற்பத்தி 1.80 கோடி டன்னுக்கு உயர்ந்துள்ளதால்அமெரிக்காவில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. என்ன புதிராக உள்ளதாஇந்தியாவில்மக்காச்சோள உற்பத்தி உயர்ந்ததால் அமெரிக்கா எப்படி சந்தோஷம் அடைய முடியும்?
 உணவை மையமாகக் கொள்ளாமல் தொழிலுக்குரிய கச்சாப் பொருள் உற்பத்தியைமையப்படுத்தும் விவசாயத்தை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கன்எய்ட் ஆர்வமாயுள்ளது.

 பி.ட்டி பருத்தி வெற்றியைத் தொடர்ந்து மக்காச்சோளத்தில் வீரிய ஒட்டு விதையையும் மான்சென்டோ வழங்கி இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு வித்திட்டு இன்று வெற்றியும் பெற்றதால் அமெரிக்கா மகிழ்ச்சி அடைந்துள்ளது. மக்காச்சோளம் முழுமையான மனித உணவு இல்லை. உற்பத்தியில் 15 சதவிகிதம் மட்டுமே மனித உணவு. 60 சதவிகிதம்கோழித்தீவனம், 10 சதவிகிதம் மாட்டுத்தீவனம், 10 சதவிகிதம் ஸ்டார்ச் போக மீதி விதைக்கும் ஜின் எத்தனாலுக்கும் பயனாகிறது. 15 சதவிகித மனித உணவும்கூட பாப்கார்ன்கார்ன் ஆயில் (சமையல் எண்ணெய்)கார்ன்ஃப்ளேக்(அவல்) தொழில்வளர்ச்சிக்கு ஆக்கமூட்டுகிறது.
 இந்தியாவில் பாரம்பரியமாக சிறு தானியங்கள்பயறு வகை தானியங்கள்சாகுபடியான நிலங்களிலும் கோடை கோதுமைகரும்பு சாகுபடியான நிலங்களிலும் இன்று மக்காச்சோளம் அரங்கேறிவிட்டது.

 கரும்புக்கு நல்ல விலை இல்லையென்பதால் மானியங்களை அள்ளி வழங்கும் மஞ்சள்மக்சாச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதன் காரணம்மும்மடங்குவிளைச்சல்.
 கடந்த பத்தாண்டு நிலையுடன் ஒப்பிட்டால் அரிசியின் வளர்ச்சி ஆண்டுக்கு 1.6 சதவிகிதம்,கோதுமை 1.9 சதவிகிதம்பயறு சதவிகிதம். ஆனால் மக்காச்சோளம் மட்டும் 7.6 சதவிகிதம் வளர்ச்சி. இவ்வளவுக்கும் சுமார் 20 சதவிகிதம் வீரியரக ஒட்டுவிதை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மஞ்சள் மக்காச்சோளம் கோதுமை உற்பத்திக்கு இணையாக முதல் கோடி டன்கள் என்ற அளவுக்கு உயர்ந்து இரண்டாவது பசுமைப்புரட்சி மஞ்சள் தங்கப் புரட்சியாக விரிவடையும் என்பதில் ஐயம் வேண்டாம்.

 ஏனெனில்இந்தியாவில் மற்ற உணவு சாகுபடிகளைப் புறந்தள்ளி மக்காச்சோளஉற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்த வாஷிங்டனிலும் சிகாகோவிலும் திட்டம் தீட்டப்பட்டுவிட்டது.
 மக்காச்சோள சாகுபடி தமிழ்நாட்டில் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் அளவில் உயர்வாக இல்லை என்றாலும் சுமார் லட்சம் டன் அளவில் உண்டு. அதேசமயம்மான்சென்டோவின் வீரிய ஒட்டுரக விதைப்பயன் தமிழ்நாட்டில் 100 சதம். பிற மாநிலங்களில் 20 முதல் 30சதவிகிதமே. பருத்தி சாகுபடி செய்து நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொண்ட அதே மாநிலங்களில்தான் மஞ்சள் மக்காச்சோளம் - மான்சென்டோவின் வீரிய ஒட்டு ரகஉதவியால் தொழில்துறைக்குத் தேவையான கச்சாப்பொருளாக மாறி உற்பத்தி உயர்ந்துள்ளது.

 கர்நாடகம்ஆந்திரப்பிரதேசம்மகாராஷ்டிரம்மத்தியப்பிரதேசம்பிகார்உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான்குஜராத் ஆகியவை முன்னணி மாநிலங்கள். இம் மாநிலங்களில் ஆண்டுதோறும்10 லட்சம் டன்கள் முதல் 40 லட்சம் டன்கள் வரை மக்காச்சோள உற்பத்தி உண்டு.

 கடந்த 10 ஆண்டுகளில் எப்படிப்பட்ட விவசாயிகள் புதிதாக மஞ்சள் மக்காச்சோளசாகுபடியில் இறங்கியுள்ளார்கள் என்று கவனித்தால் பணப் பொருளாதாரத்தில் சிக்காமல்சொந்தத் தேவைக்கென்று விவசாயத்தை வாழ்க்கையெனப் போற்றி வெள்ளை ரகத்தைப் பயிரிட்டு வாழ்க்கையை ஓட்டியவர்கள். மேலும் சிலர் சொந்தப் பயனுக்கென்று மானாவாரியாகப் புஞ்சை தானியங்கள்சிறு தானியங்கள் விளைத்தவர்கள். இப்படிப்பட்ட விவசாயிகள் மான்சென்டோவிடம் சிக்கிவிட்டனர்.
 மக்காச்சோளத்தில் முக்கியமாக இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று வெள்ளை. வெள்ளைமக்காச்சோளமே மனித உணவாகவும் சுவையாகவும் இருக்கும்.

 கோதுமை மாவில் ரொட்டி செய்வதுபோல் வெள்ளை மக்காச்சோளத்தை ரொட்டி சுட்டுசாப்பிடுவார்கள். மஞ்சள் மக்காச்சோளம் மனித உணவு அல்ல. கோழி உணவு.

 சமீபகாலமாக மஞ்சள் மக்காச்சோள மாவு கறவை மாடுகளின் அடர் தீவனமாகவும்பயனாகிறது. தங்கள் உணவுக்காக வெள்ளை மக்காச்சோளம் பயிரிட்ட சிறு விவசாயிகள்,மலைப்பகுதி விவசாயிகள் இன்று மான்சென்டோவால் கவரப்பட்டு வீரிய ஒட்டு மஞ்சள்ரகங்களைத் தொழில் உபயோகத்துக்குப் பயிரிட்டு லாபமும் பெறுகிறார்கள்.

 பாரம்பரிய மக்காச்சோளம் ரசாயன உரம் பூச்சி மருந்து இல்லாமல் மானாவாரியாகவோ -குறைந்த பாசனத்திலோ விளைந்த நிலை மாறி இன்று கூடுதல் இடுபொருள் - நீர்ச் செலவில் வீரிய ஒட்டு பயிராகிறது. நடுத்தரம் - பெரிய விவசாயிகள் மஞ்சள் மக்காச்சோளம்கோதுமைகரும்பு சாகுபடியைவிடக் கூடுதல் லாபம் தருவதால் மெல்ல மெல்ல மஞ்சள் மக்காச்சோளத்துக்கு மாறிவிட்டார்கள். மான்சென்டோவின் தங்கப்புரட்சியில்சங்கமித்துவிட்டனர்.

 உலகளாவிய நிலையில் மக்காச்சோள உற்பத்தியில் முதல் நிலை வகிக்கும்அமெரிக்காவில் 33.3 கோடி டன்னுடன் ஒப்பிட்டால் இந்திய உற்பத்தி சுமார் கோடி டன்என்பது குறைவு என்றாலும் அமெரிக்காவின் ஆலோசனைப்படி மாற்றுப்பயிர்த் திட்டத்தில்மஞ்சள் மக்காச்சோளம் சாதனை படைத்துள்ளது.

 இந்தியாவில் மட்டுமல்லஆப்பிரிக்க - ஆசிய நாடுகளிலும் மஞ்சள் மக்காச்சோளஉற்பத்திக்கு அமெரிக்கா ஊக்கப்படுத்துவதன் நோக்கமே ஜின் எத்தனால் உற்பத்தி மூலம்கார்பன் கிரெடிட்டையும் (ஸ்ரீஹழ்க்ஷர்ய் ஸ்ரீழ்ங்க்ண்ற்) தாங்களே சுருட்டி விடலாம் என்பதே.

 அமெரிக்காவில் விவசாயிகளுக்கு மஞ்சள் ரக மக்காச்சோள சாகுபடி என்றால் சிறப்பு மானியங்கள் உண்டு. அமெரிக்காவில் சராசரி உற்பத்தித்திறன் ஹெக்டேருக்கு 10 டன்கள். அங்கு கோதுமை உற்பத்தியும் உணவாகப் பயனுறும் வெள்ளை ரக மக்காச்சோளஉற்பத்தியும் குறைந்து வருகிறது. ஏனெனில்உலகிலேயே மக்காச்சோள ஜின் - எத்தனால்உற்பத்தியில் அமெரிக்காவின் ஏகபோகம் கொடிகட்டிப் பறக்கிறது.

 அமெரிக்காவின் மக்காச்சோள எத்தனால் தொழிலின் தேவையே 200 கோடி டன்களாகும்.சுமார் 120 கோடி டன் அளவில் மக்காச்சோளம் எரிபொருள் சாராயமாக மாறிப் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறதாம். மக்காச்சோள எத்தனால் - மீண்டும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி என்பதால் கார்பன் கிரெடிட்டும் உண்டு.

 எனவேஉலகம் முழுவதும் உணவுப்பயிராகிய மக்காச்சோளத்தை மஞ்சளாக்கித்தன்னாட்டின் தொழில் தேவைக்குரிய கச்சாப் பொருளாக மாற்றி லாபத்தை அபகரிக்கும்தந்திரம் ஒருபுறம். புதிய இந்தத் தங்கப்புரட்சி மூலம் இன்று லாபம் என்று மகிழ்ச்சியுறும் அதே விவசாயிகள் நாளை நஷ்டமடைந்து நிலத்தைவிட்டு வெளியேறினால்,கார்ப்பரேட்டுகளின் நில அபகரிப்புக்கு வழியும் பிறக்கும்.

மான்சென்டோவின் மஞ்சள் மக்காச்சோளத் தங்கப் புரட்சியால் அமெரிக்காவுக்குத் தங்கம் கிடைக்கும். இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்தங்கம் கிடைக்காது. நிறைய பங்கம் கிடைக்கும்.

Wednesday 26 October 2011

உணவுக் கொள்ளையர்கள்...







2011- இந்தியாவைப் பொருத்தவரை உலகப் பிரசித்தமான விஷயம் 2ஜி ஊழல். மற்ற மூன்றாம் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது ஊழலில் நாம் உயர்ந்து நின்றிருந்தாலும், வறுமையை அளவிடுவதில் குழப்பம் இருந்தாலும், பஞ்சம், பசி, பட்டினி, உணவு விலை ஏற்றம், எண்ணெய் விலை நெருக்கடி போன்ற காரணங்களால் எதுவும் புரட்சி, மக்கள் எழுச்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் தோன்றவில்லை.
இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப்புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னிறைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதோர் அடித்தளம் அமைந்துவிட்டதால், மன்மோகன் சிங் பிழைத்தார். அந்த நன்றி உணர்வு இல்லாமல் அப்படிப்பட்ட உணவுத் தன்னிறைவு அடித்தளத்திலுள்ள கற்களை ஒவ்வொன்றாகக் கன்னக்கோல் போட்டுக் கழற்றும் மன்மோகன், பொருளாதார மண்டலம் என்ற லைசென்சை வழங்கி நொய்டாவில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் "விவசாய நில அபகரிப்பை' நிகழ்த்தி வருகிறார். இந்திரா காந்தியைப்போல் தொலைநோக்குப் பார்வையுள்ள ஒரு தலைவர் மத்திய கிழக்கு நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தோன்றி உண்ணும் உணவில் தன்னிறைவுத் திட்டம் தீட்டாததால், ஊழலுடன் உணவுப் பிரச்னையும் இணைந்து, மக்கள் கிளர்ச்சி செய்து, அரசியல் மாற்றமே நிகழ்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 17-ல் டுனீசியாவில் முகமது பவாசி தன்னைத்தானே தீயிட்டுக் குளித்த தீ, டுனீசியா ஜனாதிபதி சைன் எல் அபிடைன் பென் அலியைத் தலைமறைவாக்கியது. எகிப்தின் சர்வாதிகாரி ஒசைனி முபாரக்கை விரட்டியது. ஊழலுடன் இணைந்த உணவுத்தீ - தனி ஒருவனுக்கு உணவில்லாத தீ - ஏமன், ஜோர்டன், பஹ்ரைன், குவைத், சவூதி உள்ளடக்கிய அராபிய உலகை அலற வைத்துள்ளது.
உணவு விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி, கல்வியில் குறைந்த முதலீடு, உணவுப் பற்றாக்குறை என்று பல பிரச்னைகளால் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது.
உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் உலக ஏகபோக உணவு வர்த்தகர்கள் வேண்டுமென்றே உணவு நெருக்கடியை ஏற்படுத்தித் தந்திரத்தில் நரிகளாகவும் தன்னலத்தில் புலிகளாகவும் உள்ளதை எகிப்து நிகழ்ச்சி வெளிப்படுத்தக் கூடியது. எகிப்தின் உணவுப் பற்றாக்குறை ரஷிய இறக்குமதியால் ஈடு செய்யப்படுகிறது.
கடந்த முறை ரஷியாவில் போதிய உபரி இருந்த நிலையில் கிளன்கோர் ரஷியாவிலிருந்து எகிப்துக்கு கோதுமை ஏற்றுமதியைத் தடைசெய்ய ரஷிய அரசை வற்புறுத்தியுள்ளது. ரஷியாவும் அவ்வாறு தடை செய்யக் காரணம் சுவிட்சர்லாந்து நிறுவனமான கிளன்கோர் ரஷிய உணவு வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது.
ஒரு குளம் வற்றும்போது மீன்கள் பிழைத்து இனப்பெருக்கம் செய்ய ஆற்றுநீரைத் திருப்பிவிடாமல் வற்றிய குளத்தில் மீன்பிடிக்கும் உலக வர்த்தகர்கள் ஒன்றுகூடி உலக விவசாயத்தை உயர்த்தும் தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தாவோஸ் நகரில் அமெரிக்க ஆசியுடன் வழங்கியுள்ளனர். உலகத்தில் உணவு உற்பத்தி குறைந்து வருவதால் ஆண்டுக்கு 2 சதவீதம் உணவு உற்பத்தி பெருகவும், 2 சதவீதம் பசுமையக விளைவைக் குறைக்கவும், 2 சதவீதம் வறுமையைப் போக்கவும் திட்டம் தயாராகிவிட்டது.
உலகின் மாபெரும் உணவு அரக்கர்களான 17 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. யார், யார், யார் அவர்கள் என்று கேட்டால், கார்கில், கோகோ கோலா, டூபாண்ட், ஜெனரல் மில்ஸ், பெப்சி, கிராஃப்ட்ஃபுட், சேப் மில்லர், ஆர்ச்சர் டேனியல்ஸ், மிட்லாண்ட், பி.ஏ.எஸ்.எஃப், மெட்ரோ ஏ.ஜி, யூனிலிவர், சைன்ஜெண்டா, வால்மார்ட், யாரா இண்டர்நேஷனல், பஞ்சி லிமிட்டட். யு.எஸ். எய்டின் கைங்கர்யம் இது.
உலக விவசாயம் முற்றிலுமாகத் தொழில் நிறுவனக் கைப்பற்றாக மாற்றும் திட்டம் அமெரிக்க எய்ட் என்று கூறப்படும் யு.எஸ். ஏஜன்சி ஃபார் இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் தயாரித்துள்ள சதித் திட்டம். யு.எஸ். எய்டின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா, ""உணவில் பொதுத்துறையுடன் தனியார் கூட்டுறவு வளர்ந்து உற்பத்தி உயர வளரும் நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்'' என்று தாவோஸில் கூறியுள்ளார்.
விவசாயம் உணவு நிறுவனங்களின் கைப்பற்றாக மாறும்போது உணவு உற்பத்தியில் ஒரு நாட்டின் தன்னிறைவு புறந்தள்ளப்பட்டு ஏற்றுமதியே குறிக்கோளாக மாறும். விவசாயம் மேலும் மேலும் ரசாயனத்துக்கு அடிமையாகி மண்வளம் சுரண்டப்படும். ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு மேல்மட்ட ஊற்றுகள் வற்றும். பசுமைப்புரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. விவசாயிகளைக் கடனாளிகளாக்கியதுடன் கிராமங்களைவிட்டு விவசாயிகளை வெளியேற்றும் திட்டங்களும் செயலாகிவிட்டன. உலக வர்த்தக அமைப்பின் நியாயமற்ற உணவு வர்த்தக விளைவாலும் விவசாயிகள் காணாமல் போய்விட்டனர்.
உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 149 நாடுகளில் 105 நாடுகளின் உணவுத் தேவை இறக்குமதியை நம்பியுள்ளன. வடக்கு நாடுகள் உணவு வழங்கும் நாடுகளாகவும் தெற்கு நாடுகள் உணவுக்காகத் திருவோடு ஏந்தும் நாடுகளாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில் இந்திய நிலை என்ன? இந்தியாவையும் திருவோடு ஏந்த வைக்கும் ஏற்பாடுகளில் சர்தார்ஜி அலுவாலியா தீவிரமாயுள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிகாகோ வர்த்தகப் பள்ளி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன் என்பவர் நிதி ஆலோசகராகவும் விளங்கி வருகிறார். ""இன்னமும் ஏன் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'' என்றும் விவசாயத்துக்கு 5 சத மக்கள் போதுமானது என்றும் கூறியுள்ளார். ரகுராம் ராஜன் ஓதிய வேதவாக்கை அப்படியே பிரகடனம் செய்யும் மன்மோகன் சிங், ""இந்திய விவசாய வளர்ச்சிக்கு விவசாயிகள் முட்டுக்கட்டையாக உள்ளதால் - அரைக்காணி, காக்காணியெல்லாம் வெளியேறி வேறு பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்று கூறியுள்ளதைக் கேட்டு... ""மூட்டையைக் கட்டிக்க... பட்டணந்தான் போகலாமடி'' என்று விவசாயிகள் கிளம்பிவிட்டதை மக்கள்தொகைப் புள்ளிவிவரமும் நிரூபிப்பதாயுள்ளது.
2001-லிருந்து 2011-க்கு வரும்போது சுமார் 9 கோடி மக்கள் நகர்ப்புறம் வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மொத்த மக்கள்தொகை 2011-ல் 121 கோடி. இதில் 83.3 கோடி மக்கள் கிராமத்தில் உள்ளதாக ஒரு கணக்கு - அதாவது 70 சதவீதம் இருப்பினும் இவர்களில் சரி பாதி விவசாயம்சாராத பணியில் ஈடுபட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.
கிராம மக்கள் அதாவது கிராமத்தில் வசித்தாலும் விவசாயம் செய்வோர் என்று இன்றைய தொழில்மய உலகில் கணக்கிட முடியாது. யு.எஸ். எய்ட் கூறுவதையெல்லாம் மன்மோகன் சிங் நிறைவேற்றியவண்ணம் உள்ளார். அன்னாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அலுவாலியா அண்மையில் ஓமானி நிறுவனத்துக்கு ஏற்றுமதிக்குரிய விவசாய உற்பத்தியைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே நீண்டகாலமாகச் செயல்பட்டுவந்த வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிச் சட்டத்தை அகற்றிய அலுவாலியா இந்தியத் தொழில் வர்த்தக அமைப்புக் கூட்டணியை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சிறு விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றி வரும் மார்க்கெட் கமிட்டிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு அந்த இடத்தைப் பன்னாட்டு ஏகபோகங்கள் ஆக்கிரமிக்கும். 2005-ல் மார்க்கெட் கமிட்டி சட்டத்தில் உணவுத்தொழில் நிறுவனம் விரும்பும் உகந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்டம், பொதுவிநியோகம். உணவு மானியம் எல்லாம் நிதிநெருக்கடியைக் காரணம்காட்டி உணவு வர்த்தகத்தில் தனியார் நுழைவு படிப்படியாக அனுமதிக்கப்படலாம்.
ஏனெனில், திட்டக்கமிஷன் பொருளியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், அரசுப் பணித்துறைச் செயலர்கள் போன்றோர் சுதந்திர வணிகம், சில்லறை வணிகத்தில் தொழில் நிறுவன ஆதிக்கம் - உணவுச்சங்கிலி என்று அமெரிக்காவில் காண்பவைகளை இந்தியாவுக்குள் கொண்டுவரத் துடிக்கின்றனர். இப்படிக் கொணர்வதன் மூலமே விவசாயத்தை உயிர்த்துடிப்பாக மாற்றலாம் என்று பேசுகின்றனர்.
ஏறத்தாழ இன்றைய இந்தியா விவசாயத்தைக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்க முன்வந்துவிட்டது. விவசாயிகளே சமூகத்துக்கு பாரமாகிவிட்டனர் என்பதால், அரசின் கொள்கையே விவசாயிகளை ""மூட்டையைக் கட்டிக்கோ, பட்டணம்போய் பிழைச்சுக்கோ'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. பாரம்பரியம் என்ற பேச்சே காதில் விழ வேண்டாம். விதை விற்பனையில் மான்செண்டோவின் ஏகபோகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது.
பயோடைவர்சிட்டி, பயோடெக்னாலஜி, ரசாயன உரம், உயிர்க்கொல்லி, களைக்கொல்லி எல்லாமே கார்ப்பரேட்டு விவசாயம் கைப்பற்றும். அடுத்த பசுமைப்புரட்சியில் விவசாயிகளுக்கு இடமில்லை. பொருளாதார மண்டலத்தில் ஏதும் கிடைத்தால் விவசாயிகள் சாப்பிடலாம் என்ற அளவில், ரியல் எஸ்டேட், நிலப்பறிப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த வகையில்தான் நாம் முதலில் கவனித்த இந்திராகாந்தியின் உணவு உற்பத்தியில் தன்னிறைவுக் கொள்கையை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஏற்றுமதி அடிப்படையில் உலகமயத்தை மையமிட்டு வணிக விவசாயம் தோன்றுமானால் அதில் ஆதாயம் யாருக்கு என்பதை விளக்கத் தேவையில்லை.
உலகமய மந்திரக்கோல் கொண்டு உலக உணவு வர்த்தகர்கள் உணவைக் கொழுத்த லாபம் தரும் சரக்காகக் கருதி ஊக வணிகம் வலுவடையும் நாள் நெருங்கும் வேளையில் நம்மிடம் பணம் இருந்தாலும்-அதாவது அன்னியச் செலாவணி இருந்தாலும் உலக அங்காடியில் உணவு கிட்டுமா என்ற கேள்வி எழலாம்.
உலக வர்த்தகத்தில் ஒழுங்குமுறையற்ற ஊக வணிகம் 2002-ல் 0.77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்ஜியங்கள்) என்ற நிலை இன்று 8 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா நீங்கலாக உணவு வர்த்தகத்தைக் கைப்பற்றிவிட்ட பன்னாட்டு ஏகபோகங்கள் உணவு இறக்குமதியை நம்பி வாழும் நாடுகளில் உணவு விலையை உயர்த்தி விட்டன. பசியுடன் வேலையின்மையும் சேர்ந்து ஏழை நாடுகளைத் துயரிலாழ்த்திவிட்டதால் மக்கள் கிளர்ந்தெழுந்து அந்தந்த நாட்டுத் தலைவர்களைக் குற்றவாளியாக்கினாலும் நிஜமான குற்றவாளி நியூயார்க்கின் வால்தெரு. நிதி விற்பன்னர்களின் இப் பொன்னகரத்திலிருந்து வெளிவரும் விஷவாயுவுடன் எண்ணெய் விலையும் பற்றி எரிவதால் ஏழை நாடுகளின் வயிற்றில் பசித்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. உணவு உத்தரவாதச் சட்டம் இயற்றப் போகும் மன்மோகன் அரசு, குறைந்தபட்சம் இந்திய விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்காமல் மீண்டும் உணவில் தன்னிறைவை நோக்கித் திட்டமிடுவதன் மூலமே உணவுக்கு உத்தரவாதம் வழங்க முடியும். இல்லாவிட்டால் உலக உணவு வர்த்தகப் புலிகளுக்கு இந்தியா இரை
யாகிவிடும்.

நன்றி!!

ஆர்.எஸ். நாராயணன்
First Published : 25 Oct 2011 10:26:13 PM IST
தினமணி . கட்டுரை பகுதி 

Wednesday 27 July 2011

மூலிகை பூச்சி விரட்டிகள்

இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி என்றால் என்ன?


உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது.

ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.





இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் இவை:





தசகவ்யா





பீஜாமிர்தம்





அக்னி அஸ்திரம்





பிரம்மாஸ்திரம்





மண்பானை செடித்தைலம்





அரப்பு மோர் கரைசல்





வேம்பு புங்கன் கரைசல்





நீம் அஸ்திரா





சுக்கு அஸ்திரா





சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி





வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி





மஞ்சள் கரைசல்





இஞ்சி கரைசல்





இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல்





துளசி இலை கரைசல்





பப்பாளி இலை கரைசல்





வசம்பு– பூச்சிவிரட்டி





பொன்னீம் பூச்சிவிரட்டி





ஒட்டு திரவம்





விளக்குப் பொறி





இனக்கவர்ச்சி பொறி





ஒட்டும் பொறி





தசகவ்யா எப்படி தயாரிப்பது?



தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின்

சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால்

பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது.

இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான

பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும்

அதிகரிக்கின்றது.



தசகவ்யா தயாரிக்கும் முறை.



தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய்

களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக்

கொள்ளவேண்டும். அவைகளானவை.



ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.



ஊமத்தை (Datyra metal) 1 kg.



நொச்சி (Vetex negundo) 1 kg.



வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.



வேப்பிலை (Azadirachta indica) 1 kg.





மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும்

1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்

தொட்டியில் ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து

தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை

தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த

சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து

25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு

நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட்

களுக்குப் பிறகு 3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு

பயன்படுத்தலாம்.



பயன்கள்



1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து

பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும்

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால்

பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.



2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,

சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக

அளவில் கிடைக்கிறது.



3. தசகவ்ய தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும்

மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின்

எண்ணிக்கை அதிகமாகும்.

4. "தசகவ்யா' கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது





பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்





தண்ணீர் 20 லிட்டர்,

பசு மாட்டு சாணி 5 கிலோ,

கோமியம் 5 லிட்டர்,

சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,

மண் ஒரு கைப்பிடி அளவு.

தயாரிக்கும் முறை

தண்ணீர் 20 லிட்டர்,பசு மாட்டு சாணி 5 கிலோ,கோமியம் 5 லிட்டர்,சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,மண் ஒரு கைப்பிடி அளவு.

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இதுதான் பீஜாமிர்தம்





பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.



பீஜாமிர்தம் நன்மை என்ன?

1.வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.

2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.





அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

தயாரிக்க தேவையான பொருட்கள்

புகையிலை அரை கிலோ,

பச்சை மிளகாய் அரை கிலோ,

வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை:

பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர்,புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும் .இறக்கியபிறகு, பனையின் வாயில் துனியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும் .அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.



அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?

100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தல் போதும் புழு,புச்சிகள் காணாமல் போய்விடும்.







அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?

1. பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.

2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.







பிரம்மாஸ்திரம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்



நொச்சி இலை 10 கிலோ வேப்பம் இலை 3 கிலோ புளியம் இலை 2 கிலோ. 10 லிட்டர் கோமியம் மற்றும் மண்பானை.



தயாரிக்கும் முறை:



நொச்சி இலை 10 கிலோ வேப்பம் இலை 3 கிலோ புளியம் இலை 2 கிலோ.இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும்.





பிரம்மாஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம்.மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம்.





பிரம்மாஸ்திரம் நன்மைகள் என்ன?

1.அசுவனி மற்றும் பூஞ்சாண் நோய்களை கட்டுப்படுத்தும்

2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.





மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

வேம்பு இலை

50 கிராம்



எருக்கு இலை

50 கிராம்



நொச்சி இலை

50 கிராம்



பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு)

50 கிராம்



தயிர் அல்லது அடர்த்தியான மோர்

1 லிட்டர்



தண்ணீர்

1.5 லிட்டர்



தயாரிக்கும் முறை:​​

முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.





மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

வேம்பு இலை

50 கிராம்



எருக்கு இலை

50 கிராம்



நொச்சி இலை

50 கிராம்



பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு)

50 கிராம்



தயிர் அல்லது அடர்த்தியான மோர்

1 லிட்டர்



தண்ணீர்

1.5 லிட்டர்



தயாரிக்கும் முறை:​​

முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.





அரப்பு மோர் கரைசல் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

அரப்பு இலை(அ) உசிலை மர இலை-2 கிலோ.

புளித்த மோர்-5 லிட்டர்.

மண்பானை.



தயாரிக்கும் முறை:​​

நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானையில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.





அரப்பு மோர் கரைசல் எப்படி பயன்படுத்துவது?

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.





அரப்பு மோர் கரைசல் நன்மைகள் என்ன?

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.

குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.





அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.







வேம்பு புங்கன் கரைசல் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள் :-

வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.







நீம் அஸ்திரா எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள் :-

நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ

நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்

வேப்பங்குச்சிகள் மற்றும்

வேப்ப இலை 10 கிலோ





தயாரிப்பு முறை:

இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.





சுக்கு அஸ்திரா எப்படி தயாரிப்பது?

சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்றால் என்ன


பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர் வளர்ச்சிக்கும் அதிக அளவு பூ பிடிப்பதற்கும் காய்கனி வளர்சிக்கும் உணவு பொருள் அதிக அளவு உற்பத்தி செய்யவதற்கும் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப் படுகிறது. அவை



மீன் அமிலம்





முட்டை ரசம்





பழக்காடி கரைசல்





தேமோர் கரைசல்





தொல்லுயிர் கரைசல்





லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்





ஆட்டு ஓட்டம்





இயற்கை உர டீ





எலுமிச்சை முட்டைக் கரைசல்





மீன் அமிலம் என்றால் என்ன ?

விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் அதிகளவில் பச்சையாக இருக்க வேண்டும் என பயிர் மற்றும் செடிகள் நட்டவுடன் நன்றாக வளர்ச்சி காணப்படும் போது தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பயிர்களின் வளர்ச்சி,​​ குறைந்த கால அளவில் அதிகமாக காணப்பட்டாலும் அதிகளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக அதிகளவு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பல சமயங்களில் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டு மகசூல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.





மீன் அமிலம் எப்படி தயாரிப்பது?

தயாரிக்கும் முறை:​​

ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,​​ ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும்.​ மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.​ இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.​ பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.





மீன் அமிலம் எப்படி பயன்படுத்துவது?

பயன்படுத்தும் முறை:

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.​ பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.​ ​தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய்,​​ பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.



மீன் அமிலம் நன்மைகள் என்ன ?

மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.​ ​

​ விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும்.​ ​​ இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ,​​ பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

எனவே விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி,​​ உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.





முட்டை ரசம் எப்படி தயாரிப்பது?

பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.





பழக்காடி கரைசல் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:



சாணம்-20 கிலோ, கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,

தண்ணீர்-50 லிட்டர், ஜீவாமிர்தம் -5-10 லிட்டர். தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.





இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும்.





தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

புளித்த மோர் - 5 லி இளநீர் - 1 லி இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.

1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.







தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி தயாரிப்பது?

தயாரிக்கும் முறை

50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.





தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி பயன்படுத்துவது?

பயன்படுத்தும் முறை



200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் - 1 ஏக்கர்

10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்





தொல்லுயிர் கரைசல் நன்மைகள் என்ன ?

archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.

இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

இயற்கை நுண்ணுயிர் உரம் /நுண்ணுரம்

இயற்கை நுண்ணுயிர் உரம் /நுண்ணுரம்


நுண்ணுயிர் உரம் என்பது செயல்திறனுள்ள நுண்ணுயிர்கள் அடங்கிய ஒரு கலவையாகும். இவற்றை மண்ணில் இடும் பொழுதோ, அல்லது விதை நேர்த்திக்குப் பயன்படுத்தும் பொழுதோ, கலவையில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள கனிமங்களோடு (பயிர் ஊட்டச்சத்துக்கள்) வினைபுரிந்து, அவற்றை பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறது. நுண்ணுயிர் உரம் மண் வளத்தை பாதுகாக்க முக்கியப் பங்குவகிக்கின்றது. அவை



பஞ்சகவ்யம்





ஜீவாமிர்தம்





தானியக் கரைசல்





திறன் நுண்ணுயிர்





அசோலா





பஞ்சகவ்யம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

பசுஞ்சாணம்-5 கிலோ, பசுவின் கோமியம்-3 லிட்டர், பசும்பால்-2 லிட்டர், பசு தயிர்-2 லிட்டர், பசு நெய்-1 லிட்டர், கரும்புச்சாறு-1 லிட்டர், தென்னை இளநீர்-1 லிட்டர், வாழைப்பழம்-1 கிலோ.







தயாரிப்பு முறை

பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும். 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.



பஞ்சகவ்யம் நன்மைகள் என்ன?



1.பஞ்சகவ்யாவை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.

2.பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்

பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.





3.பயிர்களுக்கு தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் பஞ்சகவ்யாவில் உள்ளன.

4.பசுமாட்டின் கோமியத்தில் உள்ள யூரிக் அமிலமானது உரம் மற்றும் ஹார்மோன்களாக செயல்படுகின்றன.

5.பஞ்சகவ்யாவில் உள்ள லேக்டோபேசில்லஸ் போன்ற நுண்ணுயிர்கள் அங்கக அமிலங்களையும் நோய் எதிர்ப்பு பொருட்களையும் உற்பத்தி செய்வதோடு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல் படுகிறது.

6.தென்னை இளநீரானது பயிர்களின் பச்சையத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.





ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.

இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

பயன்படுத்தும் முறை

ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.





ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .



ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள்





4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )





15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.





6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )





30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.



ஓர் ஆண்டு பயிர்களுக்கு



30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர்.

240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .

பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.







ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன?

ஜிவாமிர்தம் பாய்சசப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .

ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.

ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.







ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா?

ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.





தானியக் கரைசல் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்





உளுந்து -100 கிராம்

பச்சைப் பயறு -100 கிராம்

காராமணி -100 கிராம்

கொண்டைக்கடலை -100 கிராம்

கொள்ளு -100 கிராம்

எள்-100 கிராம்-100 கிராம்

கேழ்வரகு அல்லது கோதுமை -100 கிராம்







தயாரிப்பு முறை



முதல் நாள் எள்ளை மட்டும் தனியாக ஊறவைத்து .துணியில் கட்டி முளைக்கட்ட வைக்க வேண்டும் .மறுநாள் மீதி அனைத்துத் தானியங்களையும் ஒன்றாகக் கலந்து முளைக்கட்ட வைக்க வேண்டும் முளைக்கட்டிய பிறகு ,அனைத்தயும் விழுதாக அரைத்து 10 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் கலந்து ,200 லிட்டர் தண்ணீர் சேர்த்து , ஜீவாமிர்தத்தைக் கலக்குவது போல் கலக்கி விட வேண்டும்.இதை 24 மணி நேரம் கழித்து பயன்படுத்தலாம்.



திறன் நுண்ணுயிர் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

10-க்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளின் வேர் பகுதி மண் அரை கிலோ, பரங்கிப் பழம் 2 கிலோ, பப்பாளிப் பழம் 2 கிலோ, சாராய வெல்லம் 1 கிலோ, குடிநீர் தேவையான அளவு, நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3, வாய் அகன்ற பிளாஸ்டிக் பாத்திரம் 20-30 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

தயாரிப்பு முறை

நன்கு செழிப்பான, நோய் தாக்கமில்லாத 10 வகையான மரம், செடி, கொடி வகைகளின் வேர்ப்பகுதியிலிருந்து வேர் மற்றும் மண்ணை சேகரித்துக்கொள்ள வேண்டும். 1 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து 500 கிராம் வீதம் 10 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து மண்ணை சேகரிக்கலாம். இதனை பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்து கொண்டு, பரங்கியும், பப்பாளிப்பழம் மற்றும் சாராய வெல்லம் ஆகியவற்றை பிசைந்து போடவேண்டும். பிறகு நல்லநீரை மண், பப்பாளி, பரங்கி, வெல்லம் ஆகியவை மூழ்கும் வரை ஊற்றவேண்டும். பிறகு முழு நாட்டுக்கோழி முட்டையை அதனுள் போடவேண்டும். பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு மூடி, நிழலில் வைக்க வேண்டும். காற்றோட்டத்துக்காக காலையிலும், மாலையிலும் பிளாஸ்டிக் பாத்திரத்தை திறந்து மூடவேண்டும். 30 நாள்களுக்குப் பிறகு திறன் நுண்ணுயிரி கலைவையை பயன்படுத்தலாம். 6 மாதம் வரை இக்கலவையை பயன்படுத்தலாம்.





திறன் நுண்ணுயிர் எப்படி பயன்படுத்துவது?

பயன்படுத்தும் முறை

பாதிக்கப்பட்ட தென்னையின் அடிப்பாகத்தில் மூடாக்கு எனப்படும் முறையை பயன்படுத்தி (தென்னை ஓலை அல்லது மட்டையால் வேர் பகுதியை மூடுதல்) அதன்மேல் நுண்ணுயிரி கலவையை ஊற்ற வேண்டும். (30 லிட்டர் நீருடன் 1 லிட்டர் திறன் நுண்ணுயிரி கலந்து தெளிக்கலாம்). இக்கலவையை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதனால் இடுபொருள் செலவு குறைவு, ஈரப்பதத்தை கட்டுப்படுத்துதல், குறைவான கூலி, காய்களின் நிறம், வடிவம், அளவு மற்றும் சுவை அதிகரிப்பு. பஞ்சகவ்யம் மற்றும் திறன் நுண்ணுயிரி கலவை வாடல் நோயால் மரம் பாதிக்காத வகையில் காக்கும் என்றார்.

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

இயற்கை விவசாயம் என்றால் என்ன?


மனிதன் இயற்கையை இயற்கையாக உழவுத் தொழிலை செய்வது இயற்கை விவசாயம்.பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம்,நீர், காற்று, மற்றும் சூரிய ஒழி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது. ஆனால் இன்று மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக சத்தான உணவுப் பொருள்களையும் அதிகரிக்க வேண்டும்.

இயற்கை உரம்,இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை நுண்ணுயிர் உரம் ஆகியவற்றின் முலம் இயற்கை விவசாயம் செய்து சத்தான உணவுப் பொருள்களை அதிகரிக்க முடியும்.





செயற்கை விவசாயம் ஏன் செய்ய கூடாது ?

இயற்கை விவசாயத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது செயற்கை விவசாயம்.செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள்.போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால், குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால், ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும்.



அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை.

செயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) முறையில் உணவு பொருள் உற்பத்தி செயப்படுகிறது. ஆனால் தரமான பொருள் உற்பத்தி செய்யமுடியாது.



1880 ஆம் ஆண்டுக்கு பின் மனிதன் செயற்கை விவசாயத்துக்கு முழுமையாக மாறிவிட்டான். இதானால் தாய்யின் கருவில் உள்ள குழந்தை முதல் பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏதவாது ஒரு நோய் பெயர் தெரிந்த பெயர் தெரியாத புது புது நோய் இருக்கிறது.தினம் தோறும் புது புது நோய்யால் மக்கள் உயிர் இறப்பு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.



இந்த செயற்கை விவசாயத்தினால் பூமியில் உள்ள முழுமையாக அல்லது பாதி உயிர் இனங்கள் உயிர் இழந்துவிட்டது. இயற்கை வளம் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. .இதனால் செயற்கை விவசாயம் அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

செயற்கை உரம் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்யும் கம்பெனியிடம் இருந்து அரசாங்கத்திற்கும் ஒரு சில அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் கிடைக்கிறது. மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்துவிடும். விலை வாசி உயர்ந்து விடும் என்கின்ற பயம்.



செயற்கை விவசாயத்தை ஏன் தொடங்கி வைத்தார்கள்?









உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்க ஆனால் தரமான பொருள் உற்பத்திக்கு அல்ல. ரசாயனம் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையின் முலம் அதிக இலாபம் இட்ட.



செயற்கை விவசாயத்தினால் யாருக்கு என்ன நன்மை ? யார் இலாபம் அடைகிறார்கள் ?

செயற்கை விவசாயம் செய்வதனால் உழவருக்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் இல்லை .ஆனால் செயற்கை உரம், மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனி நல்ல இலாபம் அடைகிறது.





இயற்கை மற்றும் செயற்கை விவசாயத்தில் உள்ள நன்மை/தீமைகள் என்ன?

தரமான பொருள் அதிகமாக உற்பத்தி செய்தல்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் தரமான உணவு பொருளை அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்





செயற்கை விவசாயம்:

அதிகமாக உணவு பொருளை உற்பத்தி செய்ய முடியும் ஆனால் தரமான உணவு பொருளை உற்பத்தி செய்ய முடியாது





உற்பத்தி பொருள் வைப்பு திறன்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் உற்பத்தி பொருள் அதிகமான நாள் வைத்துருக்க முடியும்





செயற்கை விவசாயம்:

முடியாது





உற்பத்தி செலவு

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் உற்பத்தி பொருளுக்கு செலவு மிகமிகக் குறைவு





செயற்கை விவசாயம்:

உற்பத்தி பொருளுக்கு செலவு அதிகம்





ஆரோக்கியமாக வாழமுடியும்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் இயற்கையாக உணவு பொருள் உற்பத்தி செய்யபடுகிறது. இதனால் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும்.





செயற்கை விவசாயம்:

செயற்கை விவசாயத்தில் செயற்கையாக உணவு பொருள் உற்பத்தி செய்யபடுகிறது. இதனால் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியாது.





இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் பாதுகக்கபடுகிறது

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் முழுமையாக பாதுகக்கபடுகிறது.





செயற்கை விவசாயம்:

செயற்கை விவசாயத்தில் இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் முழுமையாக அழிக்கப்படுகிறது.





புது புது நோய்கள்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தினால் மனிதனுக்கு நோய்கள் வருவது இல்லை.





செயற்கை விவசாயம்:

செயற்கை விவசாயத்தினால் மனிதனுக்கு புது புது நோய்கள் அதிகமாக வருகிறது.





உழவர்களின் நண்பன்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் மண்புழுக்கள்,​​ தட்டான்கள்,​​ மற்றம் நுண்ணுயிரிகள் பாதுகக்கபடுகிறது.





செயற்கை விவசாயம்:

மண்புழுக்கள்,​​ தட்டான்கள்,​​ மற்றம் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகிறது.





உரம் மற்றம் பூச்சி மருந்துகள் அதிகமாக பயன்படுத்த வேண்டும்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் குறைவாக பயன்படுத்தினால் போதும்.





செயற்கை விவசாயம்:

அதிகமாக பயன்படுத்த வேண்டும்.மிண்டும் மிண்டும் பயன்படுத்த வேண்டும்.





விசத்தன்மை உடையது

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் உணவு பொருள் ஆரோக்கியமானது .





செயற்கை விவசாயம்:

உணவு பொருள் ஆரோக்கியமற்றது விசத் தன்மை உடையது.



இயற்கை விவசாயம் எப்படி செய்யவேண்டும்?

இயற்கை விவசாயம் இயற்கையொடு இணைந்து செய்யவேண்டும்.உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்க. மடக்கி உழவு தொழில்நுட்பம்,பசுந்தழை உரம்,பசுந்தாள் உரம், மண்புழு உரம் ,மக்கிய உரம்,இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை நுண்ணுயிர் உரம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யவேண்டும்





Friday 1 July 2011

வேதி (ரசாயனங்கள்) உரங்களினாள் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்



வேதி (ரசாயனங்கள்) உரங்களினாள் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்


களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நரம்பு, மூச்சுக்குழாய் மற்றும் குடலுறுப்புகளைப் பெரிதும் பாதிக்கிறது. சில வகையான பூச்சிக்கொல்லி ரசாயனங்களை நாம் சுவாசிக்கும் போது, அவை நுரையீரலைப் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் ஆஸ்துமா, தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பொதுவாக பூச்சிக்கொல்லிகளிகளில் காணப்படும் அட்ராக்ஸின் என்ற வேதிப்பொருள் விந்தணுக்களிலுள்ள நிறத்திரி உடைவதற்கும், மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.







நைட்ரஜன்


இதன் அளவு பயிர்களில் அதிகரித்தால் அவ்வுணவுப் பொருள்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நைட்ரஜன் உரங்களிலிருக்கும் ’அமைன்’ என்னும் பொருளானது புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

அலுமினியம்

விளைபொருட்களில் அலுமினியத்தின் அளவு அதிகரித்தால் ஆஸ்துமா, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் குழந்தை பிறப்பில் இடையூறு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

கால்சியம்

இவை சார்ந்த வேதி நச்சுப் பொருள்கள் நரம்பு வளர்ச்சியைக் கட்டுபடுத்துகிறது. மேலும் சிறுநீரகத்தை பாதிப்பதோடு, எதிர்புத்தன்மையையும் குறைக்கிறது.

கோபால்டு

இவ்வேதிபொருட்கள் உணவுப் பொருட்களில் அதிகரிக்கும் போது அவை நுரையீரலைப் பாதிக்கிறது.

போரான்

மூக்கு, தொண்டை மற்றும் கண் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மெக்னீசியம்

மூச்சிக்குழாய், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

லிட்டேன்

நரம்புப்பகுதிகளில் நச்சுத்தன்மையையும், மார்புபுற்று நோயையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக நரம்பியல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மாலத்தியான்

உடலில் நுழைந்த பொழுதினிலேயே நரம்புமண்டலத்தைப் பாதிக்க ஆரம்பித்து விடுகிறது.

பாரத்தியான்

நோய் எதிர்பு சக்தியை தடுத்து இனவிருத்தியை தடை செய்யும்.

டிடிடி ( டைகுளோரோ டைஃபினால் ட்ரைகுளோரோ ஈத்தேன்)


இது  அதிக அளவில் பயன் படுத்தபடும்  ஒரு ரசாயனமாகும். இது மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக உள்ளது.

சார்பரில்

பிறவி கோளறுகளை ஏற்படுத்தும், நோய் எதிர்பு சக்தியை தடுக்கும்

அட்ரலின்

மூளை, நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு, புற்றுநோய் காரணி.

என்டோசல்பான்

இனவிருத்திக்கு கேடு, நோய் எதிர்பு சக்தியை தடுக்கும், உட்சுரப்பிகளுக்கு பாதிப்பை எற்படுத்தும்.

சிந்தடிக் பைரிதிராய்டுகள்

இனவிருத்திக்கு கேடு, நோய் எதிர்பு சக்தியை தடுக்கும், உட்சுரப்பிகளுக்கு பாதிப்பை எற்படுத்தும்.

ஹெப்டேக்லர்

கருவில் உள்ள சிசுவுக்கு கேடு, இனவிருத்தியை பாதிக்கும்.

BHC லின்டன்

கருவில் உள்ள சிசுவை பாதிக்கும், புற்றுநோயை உண்டாக்கும், நோய் எதிர்பு சக்தியை தடுக்கும்,ஈரல், சிறுநீரகம், இனவிருத்தியை பாதிக்கும். 

ஏறத்தாழ 60% களைகொல்லிகள், 90% நோய்கொல்லிகள்,30%பூச்சிகொல்லிகள் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகிறது. விவசாயிகள் பூச்சிகொல்லிகளை தொடர்ந்து கையாளுவதால் தோல்சம்மந்தமான நோய்கள் ஏற்படுகிறது.நாம் உண்ணும் உணவின் மூலம் உட்கொள்ளும் பூச்சிகொல்லிகள் சிறுகக் சிறுக நம் உடலில் சேமிக்கப்பட்டு உடல் நலத்திற்கு பெறும் ஊறுபாடுகளை நாளடைவில் ஏற்படுத்துகிறது.அதிகளவு பொட்டாசியம் உரங்களை உபயோகித்தால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் மற்றும் கரோட்டீன் அளவு வெகுவாகக் குறைகிறது.நைட்ரஜன் உரங்களை அதிகளவு உபயோகிக்கும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய்களினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது.
இயற்கை உணவு பாதுகாப்பு சட்டம் (1990), இயற்கை உணவு பற்றி கூறுகையில் உணவுப்பொருளின் உற்பத்தியானது,  செயற்கை முறையில் தாயாரிக்க பட்ட பூச்சிகொல்லிகள், நோய்கொல்லிகள் போன்ற வேதி உரங்கள் 73% 
பயிர்களில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

பொதுவாக காய்கறி, பழங்களை நாம் சமைக்காத அல்லது பாதி சமைத்த அல்லது பாதியளவு சமைத்த நிலையிலேயே உண்கிறோம்.ஆகவே பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் வேதிமுறையைப் பின்பற்றுவதைக் காட்டிலும், இயற்கை முறையில் உற்பத்தி செய்வதே சிறந்த முறையாகும்.மேலும் செலவு அதிகமான,சுற்றுப்புற பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேதிமுறையைக் காட்டிலும், இயற்கை முறை வேளாண்மையினால் உற்பத்தி செய்த பொருட்கள் சிறந்த மணம் சுவை சத்துகள் கொண்டதாகவும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும். நைட்ரஜன் அளவு குறைவாக இருந்தால் வைட்டமின் மற்றும் புரதத்தின் அளவும் அதிகம் காணப்படும்.மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இரத்தத்தை சோதனை செய்து பார்த்ததில் சாதாரண பெண்களை விட 6-9 மடங்கு அதிகமான டிடிடி பூச்சிகொல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடல் நலம் மற்றும் சுற்றுப்புறப்பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு தற்போது பல உணவுத் தொழிற்சாலைகள் இயற்கை விளை பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பதபடுத்தபட்ட உணவுப்பொருட்களின் தயாரிப்பில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றன. இவ்வகையில் ஆண்டிற்கு 20 – 30 % இயற்கை உணவு தொழிற்சாலைகள் வளர்ந்து வருகிறது. 1985-ம் ஆண்டில் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளில் இயற்கை உணவு சந்தை 8 மில்லியனாகவும், 1990 – ல் 80 மில்லியனாகவும், 2000 – ல் 320 மில்லியனாகவும்,வளர்ச்சி பெற்றுள்ளது. 1998-ம் ஆண்டிற்கான வாடிக்கையாளர்களின் அறிக்கையில் பூச்சிகொல்லிகளின் தாக்கம் இல்லாததால் இயற்கை உணவுகள் சத்து நிறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். எடுத்துகாட்டாக இயற்கையில் பயிரிடபட்ட பழங்களில் பத்து மடங்கு அதிகமான தாது உப்புகள் காணபடுகின்றன. மக்களின் உடல் நலம் பாதுகாக்க பட வேண்டும் என்ற உந்தலும்,இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஆகவே இயற்கை உணவுத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி உச்சக்கட்டத்தினை அடையும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்பதை அறிய முடிகிறது.