Friday 1 July 2011

வேதி (ரசாயனங்கள்) உரங்களினாள் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்



வேதி (ரசாயனங்கள்) உரங்களினாள் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்


களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நரம்பு, மூச்சுக்குழாய் மற்றும் குடலுறுப்புகளைப் பெரிதும் பாதிக்கிறது. சில வகையான பூச்சிக்கொல்லி ரசாயனங்களை நாம் சுவாசிக்கும் போது, அவை நுரையீரலைப் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் ஆஸ்துமா, தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பொதுவாக பூச்சிக்கொல்லிகளிகளில் காணப்படும் அட்ராக்ஸின் என்ற வேதிப்பொருள் விந்தணுக்களிலுள்ள நிறத்திரி உடைவதற்கும், மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.







நைட்ரஜன்


இதன் அளவு பயிர்களில் அதிகரித்தால் அவ்வுணவுப் பொருள்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நைட்ரஜன் உரங்களிலிருக்கும் ’அமைன்’ என்னும் பொருளானது புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

அலுமினியம்

விளைபொருட்களில் அலுமினியத்தின் அளவு அதிகரித்தால் ஆஸ்துமா, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் குழந்தை பிறப்பில் இடையூறு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

கால்சியம்

இவை சார்ந்த வேதி நச்சுப் பொருள்கள் நரம்பு வளர்ச்சியைக் கட்டுபடுத்துகிறது. மேலும் சிறுநீரகத்தை பாதிப்பதோடு, எதிர்புத்தன்மையையும் குறைக்கிறது.

கோபால்டு

இவ்வேதிபொருட்கள் உணவுப் பொருட்களில் அதிகரிக்கும் போது அவை நுரையீரலைப் பாதிக்கிறது.

போரான்

மூக்கு, தொண்டை மற்றும் கண் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மெக்னீசியம்

மூச்சிக்குழாய், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

லிட்டேன்

நரம்புப்பகுதிகளில் நச்சுத்தன்மையையும், மார்புபுற்று நோயையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக நரம்பியல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மாலத்தியான்

உடலில் நுழைந்த பொழுதினிலேயே நரம்புமண்டலத்தைப் பாதிக்க ஆரம்பித்து விடுகிறது.

பாரத்தியான்

நோய் எதிர்பு சக்தியை தடுத்து இனவிருத்தியை தடை செய்யும்.

டிடிடி ( டைகுளோரோ டைஃபினால் ட்ரைகுளோரோ ஈத்தேன்)


இது  அதிக அளவில் பயன் படுத்தபடும்  ஒரு ரசாயனமாகும். இது மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக உள்ளது.

சார்பரில்

பிறவி கோளறுகளை ஏற்படுத்தும், நோய் எதிர்பு சக்தியை தடுக்கும்

அட்ரலின்

மூளை, நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு, புற்றுநோய் காரணி.

என்டோசல்பான்

இனவிருத்திக்கு கேடு, நோய் எதிர்பு சக்தியை தடுக்கும், உட்சுரப்பிகளுக்கு பாதிப்பை எற்படுத்தும்.

சிந்தடிக் பைரிதிராய்டுகள்

இனவிருத்திக்கு கேடு, நோய் எதிர்பு சக்தியை தடுக்கும், உட்சுரப்பிகளுக்கு பாதிப்பை எற்படுத்தும்.

ஹெப்டேக்லர்

கருவில் உள்ள சிசுவுக்கு கேடு, இனவிருத்தியை பாதிக்கும்.

BHC லின்டன்

கருவில் உள்ள சிசுவை பாதிக்கும், புற்றுநோயை உண்டாக்கும், நோய் எதிர்பு சக்தியை தடுக்கும்,ஈரல், சிறுநீரகம், இனவிருத்தியை பாதிக்கும். 

ஏறத்தாழ 60% களைகொல்லிகள், 90% நோய்கொல்லிகள்,30%பூச்சிகொல்லிகள் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகிறது. விவசாயிகள் பூச்சிகொல்லிகளை தொடர்ந்து கையாளுவதால் தோல்சம்மந்தமான நோய்கள் ஏற்படுகிறது.நாம் உண்ணும் உணவின் மூலம் உட்கொள்ளும் பூச்சிகொல்லிகள் சிறுகக் சிறுக நம் உடலில் சேமிக்கப்பட்டு உடல் நலத்திற்கு பெறும் ஊறுபாடுகளை நாளடைவில் ஏற்படுத்துகிறது.அதிகளவு பொட்டாசியம் உரங்களை உபயோகித்தால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் மற்றும் கரோட்டீன் அளவு வெகுவாகக் குறைகிறது.நைட்ரஜன் உரங்களை அதிகளவு உபயோகிக்கும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய்களினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது.
இயற்கை உணவு பாதுகாப்பு சட்டம் (1990), இயற்கை உணவு பற்றி கூறுகையில் உணவுப்பொருளின் உற்பத்தியானது,  செயற்கை முறையில் தாயாரிக்க பட்ட பூச்சிகொல்லிகள், நோய்கொல்லிகள் போன்ற வேதி உரங்கள் 73% 
பயிர்களில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

பொதுவாக காய்கறி, பழங்களை நாம் சமைக்காத அல்லது பாதி சமைத்த அல்லது பாதியளவு சமைத்த நிலையிலேயே உண்கிறோம்.ஆகவே பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் வேதிமுறையைப் பின்பற்றுவதைக் காட்டிலும், இயற்கை முறையில் உற்பத்தி செய்வதே சிறந்த முறையாகும்.மேலும் செலவு அதிகமான,சுற்றுப்புற பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேதிமுறையைக் காட்டிலும், இயற்கை முறை வேளாண்மையினால் உற்பத்தி செய்த பொருட்கள் சிறந்த மணம் சுவை சத்துகள் கொண்டதாகவும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும். நைட்ரஜன் அளவு குறைவாக இருந்தால் வைட்டமின் மற்றும் புரதத்தின் அளவும் அதிகம் காணப்படும்.மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இரத்தத்தை சோதனை செய்து பார்த்ததில் சாதாரண பெண்களை விட 6-9 மடங்கு அதிகமான டிடிடி பூச்சிகொல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடல் நலம் மற்றும் சுற்றுப்புறப்பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு தற்போது பல உணவுத் தொழிற்சாலைகள் இயற்கை விளை பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பதபடுத்தபட்ட உணவுப்பொருட்களின் தயாரிப்பில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றன. இவ்வகையில் ஆண்டிற்கு 20 – 30 % இயற்கை உணவு தொழிற்சாலைகள் வளர்ந்து வருகிறது. 1985-ம் ஆண்டில் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளில் இயற்கை உணவு சந்தை 8 மில்லியனாகவும், 1990 – ல் 80 மில்லியனாகவும், 2000 – ல் 320 மில்லியனாகவும்,வளர்ச்சி பெற்றுள்ளது. 1998-ம் ஆண்டிற்கான வாடிக்கையாளர்களின் அறிக்கையில் பூச்சிகொல்லிகளின் தாக்கம் இல்லாததால் இயற்கை உணவுகள் சத்து நிறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். எடுத்துகாட்டாக இயற்கையில் பயிரிடபட்ட பழங்களில் பத்து மடங்கு அதிகமான தாது உப்புகள் காணபடுகின்றன. மக்களின் உடல் நலம் பாதுகாக்க பட வேண்டும் என்ற உந்தலும்,இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஆகவே இயற்கை உணவுத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி உச்சக்கட்டத்தினை அடையும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்பதை அறிய முடிகிறது.

0 கருத்துரைகள்: