Thursday 31 January 2013


தமிழ் இலக்கியத்தில்  உழவு

உழவினை மிகச்சிறந்த தொழிலாக தமிழர்கள் கருதிவந்தார்கள்தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல   நமக்கு கிடைக்கின்ற எல்லாவற்றிலும் இத்தகைய உண்மை விளங்கக் காண்கின்றோம்பிற இடங்களிற்போல உழவனைப் பழிக்கின்ற போக்கு இங்கு இல்லைஇதை நாம் இங்கு சுட்டுவது வெறியூட்டுவதற்கன்றுதமிழ்நாட்டில் இயற்கையாகவே அமைந்துள்ள மனப்போக்கு  எதிர்கால  வளர்ச்சிகேற்றதாக உள்ளது என்பதை கூறுவதே என்பதை கூறுவதற்காகவே உழவு என்பது ‘’உழைத்தல்’’ ‘’ உழைப்பு’’ என்ற சொற்களோடு தொடர்புடையதுமெய்வருத்த பாடுபடல் என்று பொருள் படும்ஆகவே உழவுத் தொழிலுக்கே சிறப்பாக ’’உழவு’’ என்ற சொல் அமைந்திருத்தலைக் காண்கின்றோம். இதுவே‘’ உழந்தும் உழவே தலை’’
’’உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ‘’
என்று வள்ளுவர் இந்த நுட்பத்தை தெளிவாக்குவதைக் காணலாம்இதனை உழவென ஓர் அதிகாரமாக்கியே கூறியுள்ளார்உழவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வள்ளுவரின் கருத்தாழத்தைக் கண்டு வியத்தல் வேண்டும்சமுதாயத்தில் வாழும் மக்களாலேயே ஒரு நாட்டின் சிறப்பினைக் காணமுடியும் என்று வள்ளுவர் எண்ணுகிறார்.  பொருட்பாலின் முடிவில் குடிகளின் சிறப்பினை விளக்குமிடத்தில்தான் உழவினைக் கூறுகிறார்உழவே குடிமக்களின் தொழிற்சிறப்பாகும்இதற்கு மறுதலையாக விளங்கும் இரத்தலும் கயமையும் உழவினால் மட்கி மடியும் என்ற அடிப்படை உண்மையும் இங்கே தோன்றக் காணலாம்.
தமிழில் இன்று இருக்கும் நூட்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியமாகும்அதிலே வெற்றியைப்பாடும் வாகையென்பதொரு திணையுண்டுஅது போரில் எழும் வெற்றியை மட்டும் கூறுவதில்லைவாழ்க்கையில் எந்த துறையிலேனும் வெற்றிப் பெறுவது வாகையாகும்தமக்கு இயற்கையாக  அமைந்த திறனைக் குறைவிலாது நிறைவாக அமைத்துக் கூறுவது முல்லை.
 ’’ பகட்டினாலும் ஆவிஞனும் துகள்தரு சிறப்பின் சான்றோர் பக்கம்’’  என்பது வாகைத் திணையில் இடம்பெறக் காண்கிறோம். ‘’ பகடு உழவுக்கு சிறந்தது’’.  எனவே உழவிற்சிறந்தோர் பெருமையை வேளாண் முல்லையாகப் பாடுவது வழக்கமாக இருந்துள்ளதுஅதுபோலவே போர்களத்தில் வெற்றிப்பெறுதலையும்பாடவரும் புலவர்கள் ஏர்களத்தை மறப்பதில்லைபோரினையே ஒரு உழவுத்தொழிலாகக் காணும் காட்சிஉழவிலிருக்கும்  ஈடுபட்டால்  எழுதுவதாகும்வாகைத்திணையில் இவ்வாறு பாடுவதை ஏரோர்களவழி என்று தொல்காப்பியர் கூறுவர் (புறம் 369)  உலகத்திற்கு உணவு ஊட்டுபவன் உழவன்ஆதலின்உபகாரம்ஈகை,விருந்து ஆகியன் வேளாண்மை என்று வழங்கலாயினஏர்களத்தில் நெல்லைப் போராகக் கூவித்தவுடன் பகுத்துண்டு வாழ்கிறவன் உழவன்ஆகவே,
’ பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் நூலோர் தொகுத்தவற்றுகெல்லாம் தலை’’
என்ற அறமே களத்து மேட்டில் தான் தோன்றுகிறது.
சங்ககாலப்புலவர்கள் இவ்வுலவுக்கலையின் அடிப்படை உண்மைகளைப் பாடலாக பாடியதோடுமற்றவர்களுக்கும் அறிவுறுத்தினர்மறுமையில் இன்பத்திற்கும் இம்மையில் வெற்றிக்கும் வழி சொல்கிறார் ஒரு புலவர்  

நீர்ல்லையானால் உடம்பில்லை’’ ‘’ உடம்போ உணவின் பிண்டம்’’ ‘’உண்டிகொடுத்தாரே உயிர்கொடுத்தோர்’’ ஆனால் உணவோ முடிவில் நிலத்தோடு நீர் இயந்தால் தான் எழும்எனவே, ‘’நீரும் நிலனும் புணியோர்  ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே’’ நிலம் பெரிதாயினும் என்ன பயன் ? முயற்சி அல்லது தாளாண்மை வேண்டும்இங்கு ’தாள்’ என்பது ‘உழவு’ 

என்ற ஒன்றினைக் குறிப்பாக உணர்த்துவதை உணர்ந்து மகிழ்தல் வேண்டும்இவ்வாறு கூறும் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கீழ்க் கண்டவாறு கூறி முடிக்கிறார்.

‘’ அடுப்போர்ச் செழியே இகழாது வல்லே
நில மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளா தோரிவண் தள்ளா தோரே ‘’  ‘[புறம். 18]

பாண்டிய நாட்டிலுள்ள வைகை,   வயல்கள்களையும் ஏரிகளையும் நிரைத்துக் கடலிற் போகாது  நிற்கின்ற வியப்பினைவியம்பின் நுட்பத்தை இப்போது நாம் உணரமுடிகிறது.
‘’ பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
 அலகுடை நீழ லவர்’’
என்று வள்ளுவரும்
’’பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே’’
............................................................................
‘’ அதுநற் கறிந்தணை யாயின் நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிப்புறந் தருகுவை யாயின் நின்
அடிப்புறந் தருகுவர் அடங்கா தோரே  [புறம். 35]
என்று உழவரின் செல்வமும்அமைதியும் இங்கே வற்புறுத்தப் பெறுகின்றனஇதனால் உழவரிடத்திலிருந்து வரிப்பெறும் போது மலரிலிருந்து தேனெடுக்கும் வண்டுபோல  வாங்க வேண்டுமென்பதை தமிழ்நாட்டினர் மறந்ததில்லைவயலில் விளைந்ததைக் கவளமாகத் திரட்டி யானைகளுக்குத் தந்தால் பலகாலத்திற்கு தரலாம்ஆனால் யானையே அக்களத்திற்குச் சென்று உண்ணுவதாயின் ஒரு பகலுக்கு உதவாதுவாய்புகுந்து பயன்படுத்துவதிலும் கால்பட்டு சிதைவதே அதிகம்இவ்வுண்மையைப் பிசிராந்தையார்பாண்டியன் அறிவுடைய நம்பிக்கு விளக்குகிறார் [புறம் . 184] .
சங்ககாலத்திற்கு பின்  வந்த புலவர்கள்  சங்ககால ஐந்திணை வளத்தின் புனைந்துரையையொட்டி வளம் சிறந்த நாட்டினைப் பற்றிக் கற்பனையாகப் பாடினார்கள் ‘’ பிளத்தோ’’ என்பவர் சிறந்ததோர் அரசியல் சமுதாயத்தைப் பற்றி எண்ணி அதனைக் கற்பனையுலகமாகப் படைத்துக் காட்டினார்இதேபோல்தான் தமிழ்புலவர்களும் நாட்டையும் நகரையும் பாடி மகிழ்ந்தனர்மழைபாழிவதும்ஐந்திணை நிலங்களிடையே ஆற்று வெள்ளம் பெருகிவருவதும்மக்கள் அணைக்கட்டிஏரியில் நீரைத்தேக்கிவயற்பாய்ச்சிவித்திடுவதும்இன்பமாய் ஆடிப்பாடி ஆணும் பெண்ணும் நாற்றைப்பிடுங்கி நட்டுகளையெடுத்து,நெல்முற்றியதும் அறுவடை செய்துஅரிஅரியாக நெல்லைப் போரடிக்கி களத்தில் கடாவிட்டு நெல்லைப் பிரித்தெடுப்பதும்விளைந்ததைத் தூற்றிக் குதிரில் கொட்டியும்,உழைத்தோர்க்கும்மாட்டுக்கும்,புலவருக்கும்,மற்றோருக்கும் பகுத்தீந்து விருந்தோடு உண்டுவறுமையில்லாமல் அறிவுமிக்க சமுதாயமாக வாழும் ஒரு நாட்டையே இப்புலவர்கள் படைத்துத் தருகிறார்கள்.
கம்பனின் நாட்டுப்படலத்தில் உழவே திருநாளும் திருவிழாவுமாக என்றென்றும் நிலவுவதைக் காண்கிறோம்இதனால் மருதநிலத்திற்கு பரத்தையரால் இருந்த குறை முற்றும்  மறைகிறதுசங்க காலத்தில் பெறாததொரு பெருமையை மருத நிலம் பெறுகிறது. ’ஏரெழுபது’ பாடினாரேஇல்லையா?  என்று ஐயப்பாடுவாரும்அவர் நாட்டுப்படலம் பாடியதில் ஐயங்கொள்வதில்லைமருதநிலத்தையே அரசனாக்கிக் காண்கின்ற குடியரசு உலகம் அங்கே வித்திடுகின்றதெனலாம்குடிகள் உயிராக கோலேந்தும் அரசன் உடலாக அமைகின்ற புதுமை அங்கே உண்டு . அதனால் தான்  அரசருக்கு அரசராக மருதம் வீற்றிருக்கின்ற காட்சியைக் கம்பர் வாயாரப் பாடுகிறார்.

’’தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்  தாங்கக்
கொண்டல் முழுவினேங்கக் குவளைகண் விழித்துநோக்க
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பழி மகர யாழின்
வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ’’.. ( பாலநா. 4)
இந்த அடிப்படையில் தான் கம்பனுடைய திருநாடு இராமராச்சியமாக உருவாகிறதுஇதனை
’’வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மையில்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஒங்கலாம்’’
இப்படியாகத் தமிழ்ப் புலவர்கள் பாடிக் களிக்கின்றனர்முதலாளிகள் விறலிடுவதும் , காதலுமாகக் கேட்டு மகிழ்ந்த வாழ்க்கையில்வயலில் நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைப்பாரும் தமக்கேற்ற பள்ளு இலக்கியத்தைச் சிறப்புறப் பாடத் தொடங்கினர்பாரதியார் ‘’ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே’’ என்று பள்ளுதான் பாடுகிறார்அதேபோல ‘’நெல்விடு தூது’’ என்ற நூலிலும் இருக்கிறதுஇவற்றில் அடுக்கடுக்காய் பலவகை நெல்களின் பெயர்கள் வரக்காண்கின்றோம்இப்படியாகக் காலந்தோறும் வெளிவந்த இலக்கியங்களில் மக்களின் உணவிற்கு முதன்மையாக விளங்கக்கூடிய உழவுத்தொழிலைத் தம்பாடல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்பதை மேற்கண்ட விளக்கங்களால் அறியமுடிகிறது.


சுஆனந்தராசு

0 கருத்துரைகள்: