Monday 8 July 2013

வளமான சாகுபடி முறை


வளமான சாகுபடி முறை

ஒரே பயிரைத் தொடர்ந்து பயிர் செய்யாமல் சுழற்சி முறைப்  பயிர் சாகுபடி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது ஒன்றும்  புதிதாக்க் கண்டுப்பிடிக்கப்பட்ட உத்தி அன்று. சங்ககாலம் முதற்கொண்டே உழவர்கள் பயிர்ச்சுழற்சி முறையைப் பின்பற்றி வந்தமைக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தரமுடியும். பயிற்ச்சுழற்சி முறையை மேற்க்கொள்வதால் நிலம் வள்ம் பெறும். நெல் அறுத்தப் பின்பு வயலில் இருக்கும் கட்டைகளை அன்று அரிகால் என்று கூறி வந்தார்கள். நெல் அறுவடை முடிந்த பின்பு அந்த அரிகால் நஙு மண்ணில் புதையும் படி உழவு செய்து பயறுவகைப் பயிர்களைச் சாகுபடி செய்தார்கள். பயறுவகைப் பயிர்களின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து இருக்கும். இதனால் நிலம் இழந்த சத்தைப் பெறுகிறது.. இதனால் தான் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட தமிழக உழவர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன என்று கூறினார்கள்
நன்றி 
 நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி; +91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல் ;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com


0 கருத்துரைகள்: